மேலும்

மாதம்: May 2019

சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு – சிறிலங்கா படையினருக்கு பீஜிங்கில் சிறப்பு பயிற்சி

சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறையைக் கொண்ட முதலாவது அணி பயிற்சிக்காக அடுத்த வாரம்  பீஜிங் செல்லவுள்ளது.

பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் – கைகோர்க்க இந்தியா முடிவு

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கை சமப்படுத்தும் வகையில், ஜப்பான் மற்றும் சிறிலங்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் முகநூல் கணக்கை முடக்கி காணொளி பதிவேற்றம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு, முடக்கப்பட்டு, நேரலையான காளொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் – ஆரம்பித்து வைத்தார் ரணில்

வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குருணாகல மருத்துவ நிபுணர் மீது இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு

குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா

முன்மொழியப்பட்டுள்ள ‘சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின்  இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை

சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார்.

வடக்கு கடலில் சிறிலங்கா கடற்படையின் பலம் இரண்டு மடங்காக அதிகரிப்பு

சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக வெளியாகிய தகவல்களை அடுத்து, சிறிலங்கா கடற்படை வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.