மேலும்

சிறிலங்கா அதிபரின் முகநூல் கணக்கை முடக்கி காணொளி பதிவேற்றம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு, முடக்கப்பட்டு, நேரலையான காளொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் திடீரென நேரலை காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது. ஐந்து நிமிடங்களுக்கு வாகனப் போக்குவரத்து தொடர்பாக காட்சி ஒளிபரப்பப்பட்டது.

முகநூல் கணக்கினுள் நுழைந்து யாரேனும் இந்த பதிவை இட்டனரா அல்லது,  சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இந்தப் பதிவேற்றம் நிகழ்ந்ததா என்று சம்பந்தப்பட்ட தரப்பினரே விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *