மேலும்

மாதம்: December 2018

பசில், கம்மன்பிலவுடன் ஒன்றாக நின்ற வசந்த சேனநாயக்க – இப்போது எந்தப் பக்கத்தில்?

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைப்படுத்த தேர்தலே ஒரே வழி – என்கிறார் மகிந்த

சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு, பொதுத்தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்று, சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப்படியும் குத்துக்கரணம் அடிக்கிறார் மைத்திரி

ராஜபக்சவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று தேர்தல் மேடையைக் கவருவதற்காக, கூறிய கட்டுக்கதையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்

சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பல்வேறு வன்முறைக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம் பௌத்த பிக்கு ஒருவர் சிறிலங்கா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

சிறிலங்காவில் சீனாவின் கடன்பொறி – ஜெனிவாவில் விவாதம்

சிறிலங்காவில் சீனாவின் கடன் பொறி தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுணதீவு காவல்துறையினர் கொலை – முன்னாள் போராளி சரண்

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த, சிறிலங்கா காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவர், நேற்று கிளிநொச்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ரணிலை பிரதமராக முன்மொழிந்தது ஐதேக – சிறிலங்கா அதிபருக்கு கடிதம்

சிறிலங்காவின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில்  எப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும் நிலையே  அனைத்துலக உறவாக பரிணமித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு அரசிதழை மீளப்பெறுகிறார் சிறிலங்கா அதிபர்?

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் ஆம் நாள் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.