கொழும்பு துறைமுத்தில் இந்தியக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்
சிறிலங்கா கடற்பரப்பில் சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான ஜமுனா, நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு தொடக்கம், காலி வரையான கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படையுடன் கூட்டு சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளது,
85.77 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில், 230 மாலுமிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.