மேலும்

மாதம்: November 2018

இன்னும் பல துருப்புச்சீட்டுகளை இறக்கி விளையாடுவேன் – எச்சரித்த மைத்திரி

தான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

ரணிலை அகற்றுவதற்காக ஒன்றிணைந்த மகிந்த – மைத்திரி தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம்

ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

200 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு – விசாரிக்காமலேயே நிராகரித்தது நீதிமன்றம்

சிறிலங்கா மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர், தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றம்  நிராகரித்துள்ளது.

சீனா, இந்தியாவுடனான உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் – நாமல்

சீனா, இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா ருடேக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா, பிரித்தானியா தலையீடு – வாசுதேவ குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும், தலையீடு செய்வதாக,  சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

சிறிலங்காவில் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர்.

அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட்

பிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.