மேலும்

கொந்தளிப்புக்கு மத்தியில் கொழும்பு வந்தார் அமெரிக்காவின் புதிய தூதுவர்

சிறிலங்காவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள சூழ்நிலையில், சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்ட, அலய்னா ரெப்லிட்ஸ் கடந்தவாரம் வொசிங்டனில் நடந்த நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் சிறிலங்காவில் கடமைகளைப் பொறுப்பேற்கத் தயாராகி வந்த நிலையில், திடீரென கொழும்பில் சடுதியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.

அமெரிக்காவுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த அரசியல் மாற்றங்களை அடுத்து, அவசர அவசரமாக, அலய்னா ரெப்லிட்ஸ் இன்று கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை கொழும்பு வந்து சேர்ந்த அவர் நாளை தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *