ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன் போது கடல்சார் விவகாரங்கள் மற்றும் பொதுவான பிராந்திய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார்.