22ஐ நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு தேவையில்லை – சட்டமா அதிபர் வாதம்
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை பொதுவாக்கெடுப்பு நடத்தாமலேயே , நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று, சட்டமா அதிபரும், பல குறுக்கீட்டு மனுதாரர்களும், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

