மேலும்

Tag Archives: நீதியரசர்

22ஐ நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு தேவையில்லை – சட்டமா அதிபர் வாதம்

முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை பொதுவாக்கெடுப்பு நடத்தாமலேயே , நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று, சட்டமா அதிபரும், பல குறுக்கீட்டு மனுதாரர்களும், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நீதியரசர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தம் அரசிதழில் வெளியீடு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான சட்டமூலம்  அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக வரையறுக்கத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு காத்திருக்கும் அடுத்த அடி – உச்சநீதிமன்றில் உடனடி விசாரணை சாத்தியமில்லை

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மகிந்த தரப்பின் முயற்சிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்றார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதியரசராக, நளின் பெரேரா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

46 ஆவது தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்கிறார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, நீதியரசர் நளின் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பெயர் நேற்று முன்மொழியப்பட்டது.

முதலமைச்சரைக் கைவிட்ட சட்டமா அதிபர்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சருக்கு சார்பாக முன்னிலையாகப் போவதில்லை என்று சட்டமா அதிபர் நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை செயலிழந்ததால் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பதில் சிக்கல்

அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்னேஸ்வரனின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்தது நீதிமன்றம்

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் அரசிதழ் மீதான இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.