நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா
சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்றத்தை நாடி இடைநிறுத்தும் மகிந்த தரப்பின் முயற்சிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதியரசராக, நளின் பெரேரா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, நீதியரசர் நளின் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பெயர் நேற்று முன்மொழியப்பட்டது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சருக்கு சார்பாக முன்னிலையாகப் போவதில்லை என்று சட்டமா அதிபர் நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் அரசிதழ் மீதான இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து இதுவரை நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேலும் ஐந்து மனுக்களை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மகரகம நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.