மேலும்

மாதம்: September 2018

ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மீண்டும் அமைச்சராக நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.

படை அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – காணாமல் போனோர் பணியகம் பரிந்துரை

ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட, படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று  காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இராஜதந்திரிகளை விட சிறப்பாக பணியாற்றினராம் முன்னாள் படைத் தளபதிகள் – கோத்தா புகழாரம்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் தூதுவர்களாக ஆற்றிய பணி சிறப்பானதாக இருந்தது என்றும், ஏனையவர்களை விட அவர்கள் திறமையாகச் செயற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விடியும் வரை நடத்தவிருந்த சத்தியாக்கிரகம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது

கொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகம் இன்று விடிகாலை வரை தொடரும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்த போதும், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.

கொழும்பு மையத்தை முடக்கி பலம் காட்டிய மகிந்த

கொழும்பு நோக்கி மக்கள் சக்தி என்ற பெயரில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று பாரிய பேரணியை நடத்தினர்.

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கப் படை அதிகாரிகள்

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க படை அதிகாரிகள் குழுவொன்று திருகோணமலையில் ஒருங்கிணைந்த கடல்சார் திறன்கள் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் பலத்த பாதுகாப்பு – கூட்டு எதிரணியின் இரகசியத் திட்டத்தை தடுக்க நடவடிக்கை

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி கொழும்பில் இன்று நடத்தவுள்ள பேரணியை எதிர்கொள்ளும் வகையில் சிறிலங்கா காவல்துறை முழுமையான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.

கோத்தாவுக்கு வெட்கமில்லையா? – ராஜித

கொழும்பில் இன்று கூட்டு எதிரணி நடத்தும் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு வேட்கமில்லை என்று சாடியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன.

பேரணி மீது சிவில் உடையில் படையினர் தாக்குதல் நடத்த திட்டம் – மகிந்த

கொழும்பில் தாம் இன்று நடத்தவுள்ள சிறிலங்கா அரசுக்கு எதிரான பேரணி மீது சிவில் உடையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.