மேலும்

மாதம்: July 2018

வடக்கில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள் – சிறிலங்கா அதிபருக்கு முதலமைச்சர் கடிதம்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மத்தலவுக்கு மீண்டும் விமானங்கள் வரும் – என்கிறார் சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை – சிறீதரன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

மகிந்தவை இணைத் தலைவராக நியமிக்க முடியாது – லக்ஸ்மன் பியதாச

மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்க முடியாது என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

மகிந்த தலைமையில் இன்று இரண்டு முக்கிய கூட்டங்கள்

கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா

சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம்

சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்படைகளுக்கான பயிற்சி – பாகிஸ்தான் தளபதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

ஆயுதப் படைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட்டும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.