மேலும்

மகிந்தவை இணைத் தலைவராக நியமிக்க முடியாது – லக்ஸ்மன் பியதாச

மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்க முடியாது என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

“சிலர் மகிந்த ராஜபக்சவை சுதந்திரக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் கட்சியின் யாப்பின்படி அதனைச் செய்யமுடியாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, கட்சியின் உறுப்பினராக உள்ள ஒருவர், நாட்டின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால், அவர் தானாகவே கட்சியின் தலைவராகவும் ஆகி விடுவார்.

முன்னாள் அதிபர்கள் காப்பாளர்களாகவே இருக்க முடியும். கட்சி யாப்பின்படி, சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிகப் பொருத்தமான ஒரு வேட்பாளரை நிறுத்தும்.

அந்த வேட்பாளர் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் தெரிவு செய்யப்படுவார். அவர் பொதுவேட்பாளராக இருக்கமாட்டார்.

எனினும், மிகச் சிறந்த வேட்பாளரை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்துவது கடினமானது. அது சவாலை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *