மேலும்

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை – சிறீதரன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தமிழ் அரசுக் கட்சி முடிவு எதையும் எடுக்கவில்லை.

ஆனால், பெரும்பாலான தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் தெரிவாக இருப்பவர் மாவை சேனாதிராசா தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *