மேலும்

மாதம்: July 2018

விக்னேஸ்வரனின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்தது நீதிமன்றம்

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் அரசிதழ் மீதான இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயகலாவின் உரை – விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா?

அண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை

அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே தங்கியுள்ளது – சாலிய பீரிஸ்

காணாமல் போனோர் பணியகத்தின் வெற்றி அரசியல் விருப்பிலேயே (political will) தங்கியுள்ளது என்று, அந்தப் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்

விடுதலைப் புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்காக, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பறிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயகலா கூறியதில் என்ன தவறு? – சுமந்திரன் கேள்வி

விடுதலைப் புலிகள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்தில் எந்த  தவறும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சீனா, ரஷ்யாவுடனான உறவுகள் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதம் – என்கிறார் பீரிஸ்

ரஷ்யா மற்றும் சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளை மைத்திரிபால – ரணில் அரசாங்கம் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.