மேலும்

காணாமல் போனோர் பணியக சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்

parliamentகாணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஏற்கனவே, இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 மார்ச் 07ஆம் நாள் இந்தச் சட்டத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னர் ஜூலை 5ஆம் நாளும், செப்ரெம்பர் 19ஆம் நாளும் இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதும் பல்வேறு குழுக்களின் எதிர்ப்புகளால் அது கைவிடப்பட்டது.

வரும் திங்களன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் சிறிலங்கா தொடர்பான முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த காணாமல் போனோர் பணியக சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *