மேலும்

செவ்வாயன்று அமைச்சரவை மாற்றம்?

lakshman kiriellaகூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம்  எதிர்வரும் 20ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆதரவுடன், இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தனித்து ஆட்சியமைப்பதற்கான புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில், ஐதேகவின் மூத்த தலைவர்களான மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க, கபீர் காசிம் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக மற்றொரு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *