யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைவு
உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று நடந்த தேர்தலில் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம், குறைந்தளவு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய வாக்களிப்பின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில், 62 வீத வாக்குகளே பதிவாகியுள்ளன. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபட்சமாக 78 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 74.24 வீதமும், வவுனியா மாவட்டத்தில் 72 வீதமும், மன்னார் மாவட்டத்தில் 77 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சிறிலங்கா முழுவதிலும் சராசரியாக 60 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில் 70 வீதம், காலியில் 75 வீதம், மாத்தறையில் 70வீதம், அனுராதபுரத்தில் 75 வீதம், மாத்தளையில் 80 வீதம், கேகாலையில் 70 வீதம், அம்பாறையில் 70 வீதம், மொனராகலையில் 75 வீதம், பதுளையில் 65 வீதம், அந்தோட்டையில் 70 வீதமும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.