மேலும்

Tag Archives: மன்னார்

வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு  உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

புத்தளத்தில் மற்றொரு ஆயுதக் கிடங்கு – வில்பத்தில் பாரிய தேடுதல்

புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்வெளியிட்டுள்ளது.

மன்னாரில் கடற்பரப்பில் இரு எரிவாயு, இரு எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சரிந்துபோன கபொத சாதாரண தர தேர்வுப் பெறுபேறு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு நேற்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் புதைகுழி அகழ்வை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட  மனிதப் புதைகுழியின்  அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு,  மன்னார் நீதிவான் சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புகள்  1499 – 1719 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஆறு எலும்புக் கூடுகளும், 1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

மன்னார் புதைகுழி மர்மம் இன்று வெளிவரும்?

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கை பெரும்பாலும் இன்று வெளியாகும் என்று சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திருக்கேதீச்சர வரவேற்பு வளைவு உடைப்பு – பரவலாக அதிருப்தி, கண்டனம்

மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் முகப்பில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ள அதேவேளை, வரவேற்பு வளைவை மீண்டும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் குறித்த ஆய்வு அறிக்கை விரைவில்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தொடர்பான றேடியோ கார்பன் அறிக்கை மிக விரைவில் கிடைக்கும் என்று புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.