மேலும்

சிறிலங்கா அதிபர், பிரதமரின் அறிக்கைகளுக்கு தேர்தல் ஆணைக்குழு தடை

Mahinda Deshapriyaஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோர் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலிலேயே இந்தக் கண்டிப்பாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் அல்லது பிரதமர் தேசிய பாதுகாப்பு தொடர்பானதோ அல்லது திடீர் அவசர நிலை தொடர்பாகவோ – அல்லது வேறு எந்த அறிக்கையை வெளியிட்டாலும், அதனை பிரசுரிக்கவோ, ஒலி, ஒளிபரப்பவோ கூடாது.

இன்று மாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடியும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *