அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரி கிழக்கு கடற்படைத் தளபதியுடன் முக்கிய பேச்சு
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான கெல்லி பில்லிங்ஸ்லி திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் அவர் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்தில், கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் நிமால் சரத்சேனவைச் சந்தித்தார்.
இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த, பரஸ்பரம் அக்கறையுள்ள பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.