வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உதவ இணக்கம் இணக்கம்
வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அதிபர் மற்றும் பி்ரதமருடன் நடத்திய பேச்சுக்களின் போதும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்தவாரம் புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதும், இதற்கான இணக்கப்பாடுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியப் பெருங்கடல் மாநாட்டுக்காக கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
ஏற்கனவே, வடக்கு தொடருந்துப் பாதை புனரமைப்புக்கு இந்தியா உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.