சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு
சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றுள்ள கபில வைத்தியரத்னவை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும், துணைத் தூதுவருமான ரொபேர்ட் ஹில்டன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இருதரப்பு மற்றும் பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் ரொபேர்ட் ஹில்டனுடன், அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 4ஆஆம் நாள்,சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர் கபில வைத்தியரத்னவை முதலில் ஜப்பானிய தூதுவர் சந்தித்துப் பேசியிருந்தார். அதையடுத்து. அமெரிக்காவின் இராஜதந்திர விவகாரங்களுக்கான அதிகாரி ரொபேர்ட் ஹில்டன் நேற்று சந்தித்துள்ளார்.