உதவிப்பொருட்களுடன் சீனாவில் இருந்து சிறிலங்காவுக்கு விரையும் மூன்று கப்பல்கள்
வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீனாவின் கப்பல்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல்கள் வரும் வியாழக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்குவதாக சீனா அறிவித்திருந்தது.
வாடகை விமானம் ஒன்றில் இந்த உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என்று சீனா கூறியிருந்த போதிலும், மூன்று கப்பல்களில் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.