அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாக, அவரது செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார் என்று தெரிய வருகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்காகவே ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது அவர் அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.