மேலும்

புதிய அரசியலமைப்பு தாமதிக்கப்படாது – மோடியிடம் வாக்குறுதி கொடுத்த சிறிலங்கா தலைவர்கள்

ranil-modi (1)புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் தாமதம் ஏற்படாது என்று தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகத் தலைவர்களுக்கும் உறுதி அளித்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு நடைமுறைகளின் மூலம் தீர்வு காண முடியும் என்று இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி, என்னுடனும், சிறிலஙகா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடனும் கலந்துரையாடியிருந்தார்.

அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழு தமது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும், கலந்துரையாடல்களுக்குப் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று இந்தியப் பிரதமரிடம் நான் கூறியுள்ளேன்.

அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை நாம் இனிமேலும் இழுத்தடிக்க முடியாது. இந்த நோக்கத்துக்காகவே, 2015இல் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார்.

நியாயமான அதிகாரப்பகிர்வின் மூம் நாட்டில் நிரந்தரமான அமைதி உருவாக்கப்படும். எதிர்காலத்தில் இன்னொரு போர் உருவாகாமல் தடுக்க வேண்டியது முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *