சிறிலங்காவுக்கு மீண்டும் கிடைத்தது ஜிஎஸ்பி பிளஸ்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இன்று முதல் சிறிலங்காவுக்கு மீளக் கிடைத்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான அறிவிப்பு நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்தே, இன்று தொடக்கம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.