கொழும்பில் இந்தியப் பிரதமர் மோடி – படங்கள்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வெசாக் அலங்கார விளக்குகளையும் ஆரம்பித்து வைத்தார்.
இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து வாகன அணியாக கங்காராமய விகாரைக்கு சென்ற இந்திய, சிறிலங்கா பிரதமர்கள் விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கங்காராமய விகாரையின் வெசாக் அலங்கார விளக்குகளின் ஆழியை இயக்கி இந்திய பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.
இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மாளிகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.