போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும், போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழக்கும் சிறப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில், அக்கறை காண்பிக்கப்படவில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.