கலப்பு நீதிமன்றத்தை அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் – ரணில்
கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமற்றது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.
“கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது. அத்தகைய நகர்வை மேற்கொள்வதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இதற்குப் பதிலாக அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்பை எப்படி நிறைவேற்ற முடியும்? கலப்பு நீதிமன்றத்துக்குப் பதிலாக, சாத்தியமான மாற்று வழி பற்றிச் சிந்திக்க வேண்டும்.
சாத்தியமான மாற்று வழியை கண்டறிவதற்கு சட்டநிபுணர்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவ வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.