மேலும்

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் எழுவைதீவில் திறப்பு

hybrid power plantசிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எழுவைதீவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை திறந்து வைத்தார்.

காற்றாலைகள், சூரியகலங்கள் மற்றும் டீசல் ஆகியவற்றின் மூலம், 60 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்தக் கலப்பு மின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கலப்பு மின் திட்டத்தின் மூலம் ஒரு அலகு மின்சாரத்தை, 9.14 ரூபாவுக்கு உற்பத்தி செய்ய முடியும்.

hybrid power plant

பசுமை சக்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியும், சிறிலங்கா மின்சார சபையும், இணைந்து 187 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கலப்பு மின் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

யாழ். குடாநாட்டின் பிரதான நிலப்பரப்புடன் தரைவழித் தொடர்பு இல்லாத எழுவைதீவுக்கு பிரதான மின்மார்க்கத்தின் ஊடாக மின் விநியோகம் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *