சீனாவுடனான உறவுகளை ஊக்குவிப்பதில் சிறிலங்கா அர்ப்பணிப்புடன் உள்ளது- மைத்திரி
பண்டைய கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணை மற்றும் பாதை முயற்சியானது சிறிலங்கா- சீன ஒத்துழைப்பில் புதிய சகாப்தம் ஒன்றைத் திறக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீன- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சீன அதிபருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவுடனான உறவுகளை ஊக்குவிப்பதில் சிறிலங்கா உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கிறது.
இரண்டு நாடுகளும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன.
இந்த உறவு நிலையானதாக வளர்ச்சி பெற்று இப்போது மூலோபாய கூட்டாக உயர்ந்துள்ளது.” என்றும் சிறிலங்கா அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.