அமெரிக்க நாசகாரி கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி
கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள யுஎஸ்எஸ். ஹொப்பர் என்ற அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பலில், சிறிலங்கா கடற்படையினருக்கு நேற்று பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் சிறப்பு அணி ஒன்று நேற்று யுஎஸ்எஸ். ஹொப்பருக்குச் சென்று அமெரிக்க கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
கப்பல்களுக்குள் நுழைந்து, தேடுதல்களை நடத்துதல், மற்றும் கப்பல்கள், ஆயுதங்கள் மற்றும் ஆட்களை கைப்பற்றும் உத்திகள் தொடர்பாகவே சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்கப் படையினர் பயிற்சிகளை அளித்தனர்.
கடந்த 19ஆம் நாள் கொழும்புத் துறைமுகம் வந்த யுஎஸ்எஸ். ஹொப்பர் நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.