அமெரிக்காவுடனான உறவுகளை பலப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு கீச்சகத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை, சிறிலங்கா அதிபர் பதிவு செய்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றி அமெரிக்க சிறிலங்கா கூட்டைப் பலப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்” என்று சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.