மேலும்

கப்பம் கோரி தமிழ் இளைஞனை கடத்தி காணாமல்போகச் செய்த கடற்படை அதிகாரி கைது

sl-navyகொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞன் ஒருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு, காணாமற்போகச் செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை அதிகாரியான, லெப்.கொமாண்டர் அனில் தம்மிகவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

இவரைக் கைது செய்வதற்கு, சிறிலங்கா கடற்படையின் கடுமையான எதிர்ப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்திக்க நேரிட்டது.

கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியை கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வான் ஒன்றுடன் கடத்தப்பட்ட இளைஞன்,வெலிசறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற்போகச் செய்யப்பட்டிருந்தார்.

இளைஞனின் வான், பாகம் பாகமாக பிரித்து, விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவ்வாறு பிரிக்கப்பட்டு விற்கப்பட்ட வாகனத்தின் எஞ்சிய சில பகுதிகள், வெலிசறை கடற்படை முகாமில் இருந்து மீட்கப்பட்டன.

அதேவேளை கடத்தப்பட்ட தமிழ் இளைஞனின் குடும்பத்தினரிடம் இருந்தும், இந்த கடற்படை அதிகாரி கப்பம் பெற்றுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *