சீன கைத்தொழில் வலயம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் – ரணில் எச்சரிக்கை
அம்பாந்தோட்டையில் சீனாவின் கைத்தொழில் வலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அது நாட்டின் வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
”அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை நாட்டின் இன்னொரு பகுதிக்கும் மாற்ற முடியும்.
அம்பாந்தோட்டையில் இதனை உருவாக்க முடியாது போனால், பொலன்னறுவவில் அதனை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் இணங்கியுள்ளார்.
அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும் எஸ்.பி.திசநாயக்கவும் இந்தக் கைத்தொழில் வலயத்தை கண்டி அல்லது நுவரெலியவில் அமைக்குமாறு கோருகின்றனர்.
அமைச்சர் சாகல ரத்னநாயக்க தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, அமைச்சர்கள் மகிந்த அமரவீர, சஜித் பிரேமதாச ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் பரிந்துரைக்கு அமையவே காணி சுவீகரிப்பு இடம்பெறும்.
இந்த கைத்தொழில் வலயம் தொடர்பான அத்தனை உடன்பாடுகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதுகுறித்து விவாதம் நடத்தலாம்” என்றும் தெரிவித்தார்.