மேலும்

ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை

hambantota-protestersஅம்பாந்தோட்டையில் தெற்கு கைத்தொழில் அபிவிருத்திய வலய ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு, நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்றுமுன்தினம், தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக, கூட்டு எதிரணியினர், பேரணியாகச் சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, நிகழ்வில் பங்கேற்றிருந்த  சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்த முயன்றனர். எனினும் சிறிலங்கா காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் விரட்டியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு வந்தார்கள் என்று காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

hambantota-protesters

நிகழ்வு நடைபெறும் பகுதிக்கு, கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே, காவல்துறையினர் அனுமதித்திருந்தனர்.

ஆனாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே, அங்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தச் சம்பவம் நடந்த போது, சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அங்கு ஏற்கனவே வருகை தந்திருந்தனர்.

நீதிமன்றத் தடையை மீறி பேரணி நடத்தியவர்கள், நிகழ்வு நடைபெறும் பகுதி வரை வந்தது எவ்வாறு என்பது குறித்தே விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *