சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் சூ ஜியான்வேய் இன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த,விவகாரங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன், சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கலந்துரையாடினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய மூத்த கேணல் லி செங்லிங் நாடு திரும்பவுள்ள நிலையிலேயே, கேணல் சூ ஜியான்வேய் கொழும்பில் பணியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்றைய சந்திப்பில், கேணல் சூ ஜியான்வேயுடன், கேணல், லி செங்லிங்கும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.