மேலும்

லசந்த படுகொலை – இராணுவப் புலனாய்வு அதிகாரியை அடையாளம் காட்டினார் சாரதி

lasantha_murderசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் மேஜர் பிரேம் ஆனந்த உடலகமவை, நேரில் கண்ட சாட்சியான சாரதி அடையாளம் காட்டினார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக கடந்த 15ஆம் நாள் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் மேஜர் பிரேம் ஆனந்த உடலகம நேற்று, கல்கிசை நீதிமன்றத்தில் நடந்த அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டார்.

படுகொலை நடந்த போது, லசந்த விக்கிரமதுங்கவின் வாகனத்தை செலுத்திய சாரதி, சந்தேக நபரை அடையாளம் காட்டினார்.

இதையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *