மேலும்

இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் சந்திப்பு

Air_Marshal_Ajit_S_Bhonsl-colomboஇந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் குழுக்களின் தலைவரான, எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே, சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம், சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத் சிங்களவை விமானப்படைத் தலைமையகத்தில் எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அத்துடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை பாதுகாப்பு அமைச்சர் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Air_Marshal_Ajit_S_Bhonsl-colombo

சிறிலங்கா இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளுடனும், எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த, பலதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *