நாமல் கைது குறித்த மகிந்தவின் மனப்பகிர்வு
தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், பிள்ளைகளைக் கைது செய்தும், அரசியலில் ஈடுபடுவதில் இருந்து என்னைத் தடுக்கலாம் என்று அவர்கள் நினைத்தால், அது கானல் நீராகவே இருக்கும்” என்று மகிந்த ராஜபக்ச முகநூலில் கருத்து பகிர்ந்துள்ளார்.
நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.