மேலும்

நாமல் ராஜபக்சவை 18ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

namalகிரிஷ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு முன்னிலையான நாமல் ராஜபக்ச இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து நாமல் ராஜபக்சவை கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, நீதிவான் லங்கா ஜெயரத்ன, அவரை வரும் 18ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *