தென்சீனக்கடல் விவகாரத்துக்கு பேச்சுக்களின் மூலமே தீர்வு காண முடியும் – சிறிலங்கா
தென்சீனக் கடல் விவகாரம், அமைதியான முறையில், ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்படுவதே ஒரு வழிமுறை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக ஊடகச் செயலர் சமன் அதாவுடஹெட்டி, அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடல் விவகாரத்தில் சில நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் இருப்பதை அறிவோம்.
இந்தப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான பேச்சுக்களின் மூலம், தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்.
பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் பேணுவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளது என்பதை எல்லா நாடுகளும் நம்புகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.