மேலும்

அனைத்துலக கப்பல் பாதையை பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா கடற்படையிடம்

navyமாலைதீவில் இருந்து மலாக்கா நீரிணை வரையான கடல் பகுதியில், பயணம் செய்யும் கப்பல்களின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமையவே, சிறிலங்கா கடற்படை இந்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் சிறிலங்காவை அண்டிய கடற்பகுதிகளில், கடற்கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே, சிறிலங்கா கடற்படையை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்புத் திட்டம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதற்கமைய, கப்பல்களின் பயணப்பாதைகளின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தும்.

ஆழ்கடல் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படை, இரண்டு கப்பல்களை, இந்தியாவிடம் இருந்து வாங்கவுள்ளது.

இவற்றில் முதலாவது கப்பல் அடுத்த ஆண்டு சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *