வரும் வெள்ளிக்கிழமையும் சிறிலங்காவில் விடுமுறை
எதிர்வரும் 15ஆம் நாள்- வெள்ளிக்கிழமையை அரசாங்க விடுமுறை நாளாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில், சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் 13ஆம் நாளும், 14ஆம் நாளும் விடுமுறை நாட்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, புத்தாண்டுக்கு மறுநாளான, வரும் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமையும், சிறப்பு அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளையுடன், புத்தாண்டு விடுமுறைக்காக மூடப்படும், சிறிலங்காவின் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், எதிர்வரும், 18ஆம் நாள், திங்கட்கிழமையே மீள ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.