துறைமுக நகரத் திட்டத்துக்கு இழப்பீடு இல்லை
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தாமதிக்கப்பட்டதற்காக, எந்த இழப்பீட்டையும் சீனாவுக்குச் செலுத்த வேண்டியதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே சிறிலங்கா பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
“சீனப் பயணத்தின் போது இழப்பீட்டு விவகாரம் எழுப்பப்படவில்லை. இது எளிதாகத் தீர்க்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
மூல உடன்பாட்டில் குறைபாடுகள் இருந்ததால் தான் இதனை நிறுத்தி வைத்தோம். அவை ஒவ்வொன்றாகத் தீர்க்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.