மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த சி்றிலங்கா இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்காலத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ கொமாண்டோக்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கேணல் மகேந்திர பெர்னான்டோ, இந்த இராணுவ அணிக்குப் பொறுப்பாக இருக்கிறார்.
89 பேரைக் கொண்ட இந்த அணியையே மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பணியில் இருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.