மேலும்

அரசியலமைப்பு பேரவைக்கு செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட 7 உபதலைவர்கள் தெரிவு

parliamentபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, சிறிலங்கா நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் முதல் முறையாக கூடியது. இதன் போது, அரசியலமைப்புப் பேரவைக்கான  ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, அரசியலமைப்புப் பேரவையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான,  செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, கபீர் காசீம், சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, திலக் மாரப்பன, மகிந்த யாப்பா அபேவர்த்தன, நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 21 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான,  லக்ஸ்மன் கிரியெல்ல, நிமால் சிறிபால டி சில்வா,  ரவூப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, சம்பிக்க ரணவக்க, ரிசாத் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம, ஆர்.சம்பந்தன்,அனுரகுமார திசநாயக்க,  டிலான் பெரேரா, தினேஸ் குணவர்த்தன, ஜயம்பதி விக்கிரமரட்ண, எம்.ஏ.சுமந்திரன், துசித்த விஜேமான, பிமல் ரத்நாயக்க , டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *