நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலக செயலாளராக மனோ திட்டவெல
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகமாக மனோ திட்டவெல நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கப் பொறிமுறைகளை வரைந்து, நடைமுறைப்படுத்துவதை, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகமே, கையாளவுள்ளது.
இதன் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மனோ திட்டவெல, அனைத்துலக கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.