சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – 150 ரூபாவை எட்டுகிறது டொலர்
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149 ரூபாவைக் கடந்துள்ளது.
சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு சடுதியாக குறையத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கியில் கடந்த திங்கட்கிழமை, 148.91 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை, நேற்று 149.54 ரூபாவாக அதிகரித்தது.
இதனால், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிலங்கா ரூபா இந்தளவுக்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.