மேலும்

நாள்: 18th March 2016

லசந்த, ரவிராஜ் படுகொலைகளின் பின்னணியில் மகிந்த, கோத்தா- பொன்சேகா தகவல்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் உள்ளிட்டோரின் படுகொலைகளை மேற்கொண்ட குழுவினருக்குப் பின்னணியில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச போன்றவர்களே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.