தாய்லாந்து பிரதிப் பிரதமர் தலைமையிலான குழு சிறிலங்கா வருகிறது
தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் தலைமையிலான அதிகாரபூர்வ குழுவொன்று, பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
நாளை தொடக்கம், வரும் சனிக்கிழமை வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தக் குழுவுக்கு தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சோம்கிட் ஜதுசிறீபிடக் தலைமை தாங்குகிறார் என்று தாய்லாந்தின் தி நேசன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இரண்டு நாடுகளினதும், பொருளாதார விவகார அமைச்சர்களுக்கிடையில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகவும், சிறிலங்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.